2016-02-21

நீங்க என்ன ஆளுக?

பெயர் கேட்டும்
ஊர் விசாரித்தும்
குலசாமி வினவியும்
தெருப் பெயரிலும்
திருமண முறைகளிலும்
மீசை அளவிலும்
காதணி வகையிலும்
பாட்டன், பாட்டியை
விளித்தல் சொற்களிலும்
நிறத்திலும் 
முகத்திலும்
உணவிலும்
மொழியிலும்
குடைந்து குடைந்து
ஊகிக்கப் படுதல் பழக்கம்தான்...
அனைத்தையும் புறந்தள்ளி
முன்நகரும் இப்பொழுதில்,
கள்ளம் குடியேறாப்
பள்ளிப் பிள்ளைகள் கைகளில்
தன் நிறங்காட்டி
கோரப்பல்லிளிக்கையில்
திகைக்கச் செய்துதான் விடுகிறது
நாசமாய்ப்போன சாதி

2 comments:

Dhanabal.G said...

Super

Unknown said...

அருமை