2010-08-15

மழைத் தோழி...

சிறு வயதில் அரிசி தின்றதாய்
சுற்றம் எல்லாம் கேலி பேச,
நாற்றங்காலில் இருந்து
சட்டென பிடுங்கப்படும்
சொல்லொணாத வலியை,
வெளிச்சப் பார்வையின் நடுவில்
புன்னகைத்துக் கொண்டிருக்கும் எனக்காக,
உரத்துச் சொல்லித் தேம்புகிறது
என் மனப் பந்தலில் பெய்யும் கனமழை...

No comments: